• ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024
    Aug 21 2024

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?

    Show More Show Less
    7 mins
  • விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன? News - 20/08/2024
    Aug 20 2024

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல் என விரிவாக விசாரித்தோம்.

    Show More Show Less
    4 mins
  • `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?
    Aug 19 2024

    `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

    Show More Show Less
    6 mins
  • எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம் News - 17/08/2024
    Aug 19 2024

    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.

    Show More Show Less
    3 mins
  • Taliban Rules | CringeTalks - 12
    Aug 17 2024

    2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM!

    -CringeTalks

    Show More Show Less
    3 mins
  • செல்லூர் ராஜூவின் இடத்தைக் குறிவைக்கிறாரா டாக்டர் சரவணன்? - தகிக்கும் மதுரை அதிமுக News - 16/08/2024
    Aug 16 2024

    'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்போகிறார்கள்' என்றும் அ.தி.மு.க-வினர் மாறி மாறிப் பேசிவருவதால் பரபரத்துக் கிடக்கிறது மதுரை மாநகர அ.தி.மு.க!

    Show More Show Less
    5 mins
  • வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்... தேவநாதன் யாதவ் கைது பின்னணி! News - 15/08/2024
    Aug 15 2024

    மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

    Show More Show Less
    4 mins
  • Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024
    Aug 14 2024

    மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது!

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பெர்முடா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்ததாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்தி முறைகேடு செய்ததாகவும் முதல் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது ஹிண்டன்பர்க்.

    Show More Show Less
    4 mins