Episodes

  • 'கலெக்டர்' என்ற மந்திரச் சொல் - சர் தாமஸ் மன்ரோ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி -1
    Aug 30 2022

    19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன்

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    10 mins
  • பட்டத்து யானையும் குட்டி இளவரசனும் ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 4
    Aug 30 2022

    பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகம். தயக்கத்துடனும் கண்களில் ஏக்கத்துடனும் பொதுமக்கள் சிலர். அதற்கு நேர்மாறாய் மிடுக்கோடு நடைபயிலும் உயரதிகாரிகள். ஒருபுறம் நிறைவேறாத கோரிக்கைகளைத் தாங்கிய கசங்கிப்போன காகிதங்கள். மறுபுறம் ரகசியம் காக்கும் அரசுக் கோப்புகளின் அசைவில்கூட அலட்சியம்.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    11 mins
  • அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12
    Aug 30 2022

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    11 mins
  • காலண்டர் மூலம் நடந்த மாபெரும் மௌனப்புரட்சி! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 14
    Aug 30 2022

    புத்தாண்டு பிறந்திருக்கிறது. கனவும் மறதியும்தான் நம் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்குகின்றன. கடந்த காலத்தின் கசப்புகளை மறக்கவே மனம் என்றும் விழைகிறது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன்|

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    11 mins
  • பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6
    Aug 30 2022

    தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் மதுரையின் 195-வது கலெக்டராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைமையும் புதுமையும் கலந்து தூங்காநகரம் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பே சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்


    Show More Show Less
    15 mins
  • தமிழ் எழுத்துக்கள்,தமிழ் நூல் பற்றி தெரியாத தகவல்கள்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 7
    Aug 30 2022

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகே இருக்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் குழுமியிருக்கிறோம். எல்லோரின் முகத்திலும் பதற்றம் தொற்றியிருக்கிறது.

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    13 mins
  • கீழடி அகழாய்வு...வெளிவராத தகவல்கள்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 3
    Aug 30 2022

    கீழடி ஏறுதழுவதலுக்குப் பிறகு உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சொல் இதுவே. தமிழர்தம் மரபு தேடிய பயணத்தின் முக்கிய மைல்கல்


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    12 mins
  • தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9
    Aug 30 2022

    கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது...

    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    Show More Show Less
    12 mins